தொடரை யார் கைப்பற்றப் போகிறார்கள்? இன்று இலங்கை–பாகிஸ்தான் மகளிர் அணிகள் மோதல்!

சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையிலான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று (28) ஹம்பாந்தோட்டா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.
மூன்று போட்டிகள் கொண்ட இந்தத் தொடரின் முதல் போட்டியில் இலங்கையும், இரண்டாவது போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்றதால், தற்போது இரு அணிகளும் 1-1 என்ற புள்ளிக்கணக்கில் சமநிலையில் உள்ளன. மேலும், இன்றைய போட்டியே ஒருநாள் தொடரின் வெற்றியாளரைத் தீர்மானிக்கும் முக்கியப் போட்டியாக அமையும்.
Follow & Share




