LATEST
காலி முகத்திடல் அருகே மர்ம சடலம்!பயணிகளுடன் ஆபத்தான பேருந்து பந்தயம்!சமயமும் கலாச்சாரமும் இணையும் பெல்லன்வில பெரஹெரா!இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள்!‘அஸ்வெசும’ நிதி மோசடி குறித்து விசேட கவனம்!உலக நம்பர் 1 இடத்திற்கான போட்டி தீவிரம் – ரூமேஷ் vs வெபர்!இலங்கை பொருளாதாரத்திற்கு மீண்டும் சவால்கள் – மத்திய வங்கி எச்சரிக்கை!இராணுவ சிப்பாய்க்கு புதிய இல்லம் – புத்தூரில் கையளிப்பு!காலி முகத்திடல் அருகே மர்ம சடலம்!பயணிகளுடன் ஆபத்தான பேருந்து பந்தயம்!சமயமும் கலாச்சாரமும் இணையும் பெல்லன்வில பெரஹெரா!இலங்கையில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டும் ஆஸ்திரேலிய முதலீட்டாளர்கள்!‘அஸ்வெசும’ நிதி மோசடி குறித்து விசேட கவனம்!உலக நம்பர் 1 இடத்திற்கான போட்டி தீவிரம் – ரூமேஷ் vs வெபர்!இலங்கை பொருளாதாரத்திற்கு மீண்டும் சவால்கள் – மத்திய வங்கி எச்சரிக்கை!இராணுவ சிப்பாய்க்கு புதிய இல்லம் – புத்தூரில் கையளிப்பு!
உள்ளூர்

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு!

August 16, 2026 · Tamil Ceylon LK

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வேகத்தில் மிதமான பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதுடன் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு  வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொள்கிறது.

Related Stories

மேலும் ›