LATEST
மீண்டும் அதிகரிக்கும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை!நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் – ஆயர் பேரவைசிறைக்குள் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!டெங்கு தாக்கம் அதிகரிப்பு – உயிரிழப்புகளும் உயர்வு!ஈரானுக்கு எதிராக புதிய பாரிய பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை!25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்த பாக்கியம்!புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கை அவசியம்!மீண்டும் அதிகரிக்கும் சர்வதேச கச்சா எண்ணெய் விலை!நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் – ஆயர் பேரவைசிறைக்குள் வீசப்பட்ட பொதியால் பரபரப்பு!டெங்கு தாக்கம் அதிகரிப்பு – உயிரிழப்புகளும் உயர்வு!ஈரானுக்கு எதிராக புதிய பாரிய பொருளாதார நடவடிக்கை – ட்ரம்ப் எச்சரிக்கை!25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்த பாக்கியம்!புலமைப்பரிசில் விடைத்தாள் திருத்தும் பணிகள் ஆரம்பம்!இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கை அவசியம்!
உள்ளூர்

இடியுடன் கூடிய மழை – முன்னெச்சரிக்கை அவசியம்!

August 20, 2026 · Tamil Ceylon LK

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

அதேநேரம் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் திருகோணமலை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (30-40) கிலோ மீற்றர் வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

மேலும் ›