25 ஆண்டுகளுக்குப் பின் ‘ஜனராஜா’ யானைக்கு கிடைத்த பாக்கியம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹெர ஊர்வலத்தின் இரண்டாவது கும்பல் பெரஹெர நேற்று (19) இரவு வீதியுலா வந்தது.
இலங்கை கலாச்சாரத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் 1716 ஆவது தலதா பெரஹெர ஊர்வலத்தின் இரண்டாவது கும்பல் பெரஹெர நேற்று மாலை 6.41 மணிக்கு அமைந்த சுப வேளையில் தனது வீதியுலாவை ஆரம்பித்தது.
25 வருடங்களுக்குப் பின்னர் இரண்டாவது கும்பல் பெரஹெரவில் புனித தந்த தாதுவை சுமந்து செல்லும் பாக்கியம் தலதா மாளிகையின் ‘ஜனராஜா’ யானைக்குக் கிடைத்தது.
இதன்போது அதன் இருபுறமும் ‘மியன் ராஜா’ மற்றும் ‘சிங்க ராஜா’ ஆகிய யானைகள் அணிவகுத்துச் சென்றன.
தலதா மாளிகைக்கு அருகில் ஆரம்பமான இந்தப் பெரஹெர, நான்கு மகா தேவாலய பெரஹெரக்களையும் உள்ளடக்கி லேக் வீதி, தலதா வீதி, டி.எஸ்.சேனநாயக்க வீதி வழியாக ராஜா வீதியினூடாக மேல்நோக்கிச் சென்று மீண்டும் மாளிகையை வந்தடைந்தது.
மூன்றாவது கும்புல் பெரஹெர இன்று (20) இரவு வீதியுலா வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




