LATEST
கனமழையும் பலத்த காற்றும் – வானிலை எச்சரிக்கை!இலங்கையை நோக்கி ஆறாவது பெரும் சவால் – சஜித் எச்சரிக்கை!22வது திருத்தம்: சலியா பீரிஸ் எழுப்பும் கேள்விகள்!கைராங் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்!குழந்தைகள் விவகாரத்தில் மெட்டாவுக்கு நெருக்கடி!வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவே 22வது திருத்தம் – நிலந்திவாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அரசுக்கு சமம் – பிரதி அமைச்சர்கனமழையும் பலத்த காற்றும் – வானிலை எச்சரிக்கை!இலங்கையை நோக்கி ஆறாவது பெரும் சவால் – சஜித் எச்சரிக்கை!22வது திருத்தம்: சலியா பீரிஸ் எழுப்பும் கேள்விகள்!கைராங் மண்சரிவு – நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்!குழந்தைகள் விவகாரத்தில் மெட்டாவுக்கு நெருக்கடி!வெள்ள அபாயம் – இலங்கையர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பு!நீதித்துறை மீதான நம்பிக்கையை மீட்டெடுக்கவே 22வது திருத்தம் – நிலந்திவாக்களித்தவர்களும் வாக்களிக்காதவர்களும் அரசுக்கு சமம் – பிரதி அமைச்சர்
உள்ளூர்

பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

August 27, 2026 · Tamil Ceylon LK

நாட்டில் இன்றும் (27) சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக அளவிலான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. 

அம்பாறை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறண்ட வானிலை நிலவும். 

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், திருகோணமலை, மொனராகலை, ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு (40-50) கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசும் பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்.

Related Stories

மேலும் ›