துடுப்பாட்டத்தில் 6ஆவது இடம் – சமரியின் புதிய சாதனை!

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தப்பத்து தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தரவரிசையைப் பெற்றுள்ளார்.
அவர் துடுப்பாட்டம், பந்துவீச்சு மற்றும் சகலதுறை வீராங்கனைக்கான தரவரிசைகளில் ஒரே நேரத்தில் தனது அதிகபட்ச நிலையை அடைந்துள்ளார்.
நேற்று (01) வெளியிடப்பட்ட மகளிர் இருபதுக்கு இருபது தரவரிசையில், அவர் துடுப்பாட்டத் தரவரிசையில் 6ஆவது இடத்தையும், சகலதுறை தரவரிசையில் 3ஆவது இடத்தையும், பந்துவீச்சுத் தரவரிசையில் 33ஆவது இடத்தையும் பெற்றுள்ளார்.
இதேவேளை, மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் இலங்கை அணி இன்று இந்தோனேசியாவை எதிர்கொள்ளவுள்ளது.
டுபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இரவு 8:00 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது.
சமீபத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு இராச்சியத்தை வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.




