விளையாட்டுத்துறை அமைச்சருக்கு எதிராக பதுரலியா கழகம் நீதிமன்றம் சென்றது!

பதுரலியா விளையாட்டுக் கழகம், விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகேவுக்கு எதிராக மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் இருந்து மூன்று அணிகள் நீக்கப்பட்டதற்காக விளையாட்டு அமைச்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதுரலியா விளையாட்டுக் கழகத் தலைவர் சுமித் பெரேரா தெரிவித்தார்.
பதுரலியா விளையாட்டுக் கழகம் உட்பட மூன்று விளையாட்டுக் கழகங்கள் முதன்மைப் பிரிவிலிருந்து தரம் குறைக்கப்படும் என்று விளையாட்டுத்துறை அமைச்சர் சமீபத்தில் அறிவித்ததோடு, கிரிக்கெட் சங்கத்தின் அரசியலமைப்பின்படி அவ்வாறு செய்வதற்கு அமைச்சருக்கு அதிகாரம் இல்லை என்றும் சுட்டிக்காட்டுகிறார்.
அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பு, கிரிக்கெட் சங்கத்தின் அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது என்று திரு. சுமித் பெரேரா கூறுகிறார்.
விளையாட்டுத்துறை அமைச்சரின் அறிவிப்பு இருந்தபோதிலும், கடந்த வாரம் நடைபெற்ற கழகங்களுக்கிடையேயான பிரீமியர் டிவிஷன் மகளிர் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் தாங்கள் வெற்றி பெற்றதை பதுரலியா விளையாட்டுக் கழகம் மேலும் நினைவுபடுத்தியது.




