உச்சமடைந்த ரகசா புயல் – அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்.
தாய்வானில் வலுப்பெற்றுள்ள ரகசா புயலால் ஹுவாலியன் மாவட்டத்தில்...
Published September 24, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
தாய்வானில் வலுப்பெற்றுள்ள ரகசா புயலால் ஹுவாலியன் மாவட்டத்தில் ஒரு ஏரி நிரம்பி தடுப்பணை உடைந்தது. இதனால் குவாங்ஃபு நகரம் வெள்ளத்தில் மூழ்க, 14 பேர் உயிரிழந்தனர்; 120-க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
இந்த சூழ்நிலையை முன்னிட்டு ஹொங்கொங் 10ஆம் நிலை எச்சரிக்கையை அறிவித்துள்ளது. விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதுடன், பாடசாலைகள் மற்றும் வர்த்தக மையங்கள் மூடப்பட்டுள்ளன.
குவாங்டாங் மாகாணத்தில் இருந்து 3.7 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளனர். மேலும், அடுத்த சில மணிநேரங்களில் கனமழையுடன் மண்சரிவு ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.