LATEST
PHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைPHI இடமாற்ற விவகாரம் – நாடளாவிய எதிர்ப்பு!மழை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை
உள்ளூர்

வாய்ச் சொல் வீர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக அரசு செயல்பட வேண்டும். #Video

October 8, 2025 · Tamil Ceylon LK

வாய்ச்சொல் வீரர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இலங்கை அரசு செயல்பட வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இன்று (08) பாராளுமன்றத்தில் வலியுறுத்தினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் UNHRC சமீபத்திய அறிக்கை தொடர்பான கேள்விக்கு பிரதமர் பதிலளிக்க மறுத்ததை விமர்சித்த அவர், அரசின் இந்த போக்கை கைவிட்டு உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என கோரினார்.

வழக்கமான புதன் கிழமை கேள்வி நேரத்தில் பேசிய சாணக்கியன், சென்ற வெள்ளிக்கிழமை (03.10.2025) பிரதமரிடம் முன்வைத்த கேள்விகளுக்கு இன்று பதில் கோரினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் மேற் கொள்ளப்பட்டது. உள்நாட்டு பொறிமுறையை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை சர்வதேச பொறிமுறை வேண்டும் எனவும், மாகாண சபை தேர்தல் தொடப்பிலும், மற்றும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையினைப் பற்றிய அரசின் நிலைப்பாடு என்ன என்பது தொடர்பாக எனது கேள்வியாது பிரதமரிடம் முன்வைக்கப்பட்டது.

அரசானது எனது கேள்விகளுக்கு பதிலளிக்காது நழுவிச் செல்கின்றது. வாய்ச் சொல் வீர்களாக இல்லாமல் செயல் வீரர்களாக இவ் அரசு செயல்பட வேண்டும் என சர்வதேச சமூகம் ஐ.நா மனித உரிமைகள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்கள். இவ்வாறு அல்லாமல் எமக்கான எமது மக்களுக்கான பிரச்சனைக்களுக்கான தீர்வுகளை அரசு இவ் நழுவல் போக்கினை கைவிட்டு தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

மேலும் ›