ஹெரோயின் வியாபாரி கைது !
யாழ் - பொலிஸ் புலனாய்வுப் பிரிவிருக்கு கிடைக்கப்பெற்ற...
Published October 27, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ் – பொலிஸ் புலனாய்வுப் பிரிவிருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுன்னாகம், புன்னாலைக்கட்டுவன் பகுதியில் இன்று (27) அதிகாலை ஹெரோயின் போதைப்பொருள் விற்பனை செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 2 ஆயிரத்து 400 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.