யாழில் ஹெரோயினுடன் இளைஞர்கள் கைது !
யாழ் - மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின்...
Published October 31, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
1 min read
யாழ் – மணியந்தோட்டம் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 24 மற்றும் 25 வயதான நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதான சந்தேகநபர்களிடம் இருந்து 2 கிராம் 540 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது
மேலும்,சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.