திடீர் சோதனையில் சிக்கிய போதைப்பொருள் : 9 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த
Published November 7, 2025
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
யாழ்ப்பாணத்தில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
யாழ்ப்பாண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த இரண்டு தினங்களில் பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்ட தீடீர் சோதனை நடவடிக்கைகளின்போது குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
கூரிய ஆயுதங்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் 2 பேரும் பகுதி பகுதியாக ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 7 பேரும் என 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைதான சந்தேகநபர்களை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த யாழ்ப்பாணம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.