கொஸ்கமையில் ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலாவ பகுதியில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட
கொஸ்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலாவ பகுதியில் நேற்று (12) முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போது ‘ஐஸ்’ போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
களனி பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதன் போது கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பின்வருவன கைப்பற்றப்பட்டுள்ளன.
முதலாவது சந்தேகநபரிடமிருந்து 700 கிராம் ஐஸ் போதைப்பொருள், போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 26,000 ரூபா பணம் மற்றும் 02 கைபேசிகள்.
இரண்டாவது சந்தேகநபரிடமிருந்து, 10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்.
மூன்றாவது சந்தேகநபரிடமிருந்து ,10 கிராம் 150 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 30 மற்றும் 32 வயதுடைய கொஸ்கம, புவக்பிட்டிய மற்றும் ஹன்வெல்ல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.