சுமார் 16 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” போதைப்பொருளுடன் மூவர் கைது
சுமார் 16 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான "குஷ்" (முரளா) போதைப்பொருளுடன் நேற்று
சுமார் 16 கோடியே 40 லட்சம் ரூபா பெறுமதியான “குஷ்” (Kush) போதைப்பொருளுடன் நேற்று இரவு, இலங்கைக்கு வந்த மூன்று பயணிகள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் கொழும்பு, வெள்ளம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 28 வயதுடைய இரு ஆண்களும், 35 வயதுடைய ஒரு பெண்ணும் ஆவர். இவர்களில் ஒருவர் அப்பகுதியில் “ஸ்பா” (Spa) மசாஜ் நிலையம் ஒன்றை நடத்தி வருபவர் எனத் தெரியவந்துள்ளது.
இவர்கள் இந்த போதைப்பொருள் தொகையை தாய்லாந்தின் பெங்காக் நகரில் கொள்வனவு செய்து, அங்கிருந்து டுபாய் சென்று, பின்னர் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-654 என்ற விமானம் மூலம் நேற்று இரவு 07:00 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் ஒன்றைச் சோதனையிட்ட போது, 60 பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருந்த 16 கிலோ 400 கிராம் எடையுடைய “குஷ்” போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட மூவரும் இன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்படவுள்ளனர்.