கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் மன்னார் திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம்
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ்
Published February 24, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வருகை தந்த சுவாமி கைலாசநந்த் கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் காலை விசேட உலங்குவானூர்தி மூலம் மன்னாரிற்கு வருகை தந்தார்.
மன்னார் தள்ளாடி விமான ஓடு தளத்திற்கு வருகை தந்த குறித்த குழுவினர் மன்னார் மாவட்டத்தில் பலம்பெற்ற திருத்தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வரம் திருத்தலத்திற்கு விஜயம் செய்தனர்.
சுவாமி கைலாசநந்த்கிரிஜி மஹராஜ் தலைமையிலான குழுவினர் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் பிரதம குரு கருணானந்த குருக்கள் மற்றும் திருக்கேதீஸ்வர ஆலய நிர்வாகத்தினரையும் சந்தித்து கலந்துரையாடி உள்ளனர்.
பின்னர் விசேட பூஜை வழிபாடுகளில் கலந்து கொண்டதோடு, ஆலயத்தையும் சுற்றி குறித்த குழுவினர் பார்வையிட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.


