மேர்வின் சில்வா, பிரசன்ன ரணவீர உள்ளிட்டோருக்கு எதிராக மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றை போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் விற்பனை
அரசாங்கத்திற்குச் சொந்தமான காணி ஒன்றை போலி உறுதிப்பத்திரங்கள் மூலம் விற்பனை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர்களான மேர்வின் சில்வா மற்றும் பிரசன்ன ரணவீர உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தினால் இன்று (27) குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான மேலதிக விபரங்கள் வருமாறு:
போலி ஆவணங்களைத் தயாரித்து அரச காணியை விற்பனை செய்தமை.ஏற்கனவே பிணையில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் இருவர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகிய போது அவர்களுக்கு எதிராக உத்தியோகபூர்வமாக குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டது.
குற்றப்பத்திரிகை கையளிக்கப்பட்டதைத் தொடர்ந்து, பிரதிவாதிகள் அனைவரும் வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்ததுடன், அவர்களின் கடவுச்சீட்டுகளை உடனடியாக நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டது.
ஒவ்வொரு பிரதிவாதிக்கும் தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான மேலதிக சரீரப் பிணைகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர்கள்:
முன்னாள் இராஜாங்க அமைச்சர் மேர்வின் சில்வா.
முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர.
நவீன் வீரகோன்.
களனி பிரதேச சபையின் முன்னாள் உபதவிசாளர் வைத்தியர் ஜயந்த சிங்கபாஹு கப்ரால்.
களனி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் மில்ரோய் பெரேரா.
முன்னாள் அமைச்சரின் பாராளுமன்ற விவகாரச் செயலாளர் சரத் குமார எதிரிசிங்க (சிங்கப்பூர் சரத்).
கம்பஹா மேல் நீதிமன்ற நீதிபதி நயனா செனவிரத்ன, இந்த வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க உத்தரவிட்டார்.