சுற்றுலாப் பயணிகள் வருகையில் வீழ்ச்சி – அதிகாரப்பூர்வ தகவல்!

கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 9.9% குறைந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதன்படி, ஜூன் மாதத்தில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டினரின் மொத்த எண்ணிக்கை 138,241 என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.
ஜூன் மாதத்தில், 35% அதிகரித்து, 43,423 இந்திய சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர்.
இதற்கிடையில், கடந்த மாதம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து 10,474 சுற்றுலாப் பயணிகளும், ஆஸ்திரேலியாவிலிருந்து 8,710 பேரும், சீனாவிலிருந்து 8,224 பேரும், அமெரிக்காவிலிருந்து 3,806 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்ததாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
மே மாதத்தில் 1,45,745 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்ததை அடுத்து, இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் நாட்டிற்கு வருகை தந்த மொத்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 11,46,573 ஆக உயர்ந்துள்ளது.
இந்தக் குழுவில் 293,683 இந்திய சுற்றுலாப் பயணிகளும், ஐக்கிய ராச்சியத்தைச் சேர்ந்த 108,567 பேரும், ரஷ்யாவைச் சேர்ந்த 77,349 பேரும், சீனாவைச் சேர்ந்த 76,171 பேரும் உள்ளனர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.




