நீதிபதிகளின் ஓய்வு வயது விவகாரம் – எதிர்க்கட்சிகள் அவசர ஆலோசனை!

நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதற்கான அரசின் முயற்சிகள், அத்துறையில் எழுந்துள்ள பிரச்சினைகள் குறித்து விவாதிப்பதற்கும், ஒரு பொதுவான திட்டத்தை வகுப்பதற்கும், எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் கூட்டம் வரும் வியாழக்கிழமை (23) அன்று நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உள்ளிட்ட கட்சித் தலைவர்களும் பிரதிநிதிகளும் இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்பார்கள்.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிக்கும் அரசாங்கத்தின் திட்டத்தைத் தோற்கடிப்பதற்காக, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே திட்டத்தில் ஒன்றிணைப்பதில் முன்னின்று வழிநடத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ சமீபத்தில் எதிர்க்கட்சித் தலைவரைக் கேட்டுக்கொண்டார்.
அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விடுத்த அழைப்பின் பேரில், கொழும்பு, மார்க்குஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இந்தக் கலந்துரையாடல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர், கட்சித் தலைவர்களிடம் தொலைபேசியில் பேசி, கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீட்டிப்பதுடன், உயர் நீதிமன்றங்களில் உள்ள காலி இடங்களை நிரப்புவதில் ஏற்படும் தாமதம் உள்ளிட்ட நீதித்துறையில் எழுந்துள்ள பல பிரச்சினைகள் மீது விரிவாகக் கவனம் செலுத்தி, ஒரு பொதுவான செயல்திட்டத்தை எட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.




