LATEST
டெங்குவை கட்டுப்படுத்த புதிய நம்பிக்கை! ‘கிவ்டெங்கா’ தடுப்பூசியை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமனம்.நீர் ஆதாரங்கள் வற்றுகின்றன!மொனராகலையில் குடிநீர் விநியோகம் கட்டுப்பாடு.நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய எதிர்க்கட்சி முடிவு.கிழக்கு மாகாணம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்!இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று குறித்து வானிலை எச்சரிக்கை.தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!டெங்குவை கட்டுப்படுத்த புதிய நம்பிக்கை! ‘கிவ்டெங்கா’ தடுப்பூசியை ஆய்வு செய்ய நிபுணர் குழு நியமனம்.நீர் ஆதாரங்கள் வற்றுகின்றன!மொனராகலையில் குடிநீர் விநியோகம் கட்டுப்பாடு.நீதி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் தாக்கல் செய்ய எதிர்க்கட்சி முடிவு.கிழக்கு மாகாணம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று கடும் வெப்பம்!இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று குறித்து வானிலை எச்சரிக்கை.தொடரும் மர்ம ம#ரணங்கள் குறித்து உண்மையை வெளிப்படுத்துங்கள்!” – மனோ கணேசன்டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வுஇரண்டாவது முறையாக கோல்டன் பூட் வென்ற எம்பாப்பே!
உள்ளூர்

இடியுடன் கூடிய மழை மற்றும் பலத்த காற்று குறித்து வானிலை எச்சரிக்கை.

July 21, 2026 · Tamil Ceylon LK

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களின் சில இடங்களில் பி்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும். 

மத்திய மலையகத்தின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை குறைத்துக்கொள்வதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›