டெங்கு அச்சம் தீவிரம்! நோயாளிகள் 76,044 ஆக உயர்வு

இந்த ஆண்டு பதிவான டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை 76,044 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று (19) மட்டும் 2,652 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
தீவு முழுவதும் உள்ள 162 சுகாதார மருத்துவப் பிரிவுகள் அதிக அபாயம் உள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவும் தெரிவித்துள்ளது.
கடந்த சில மாதங்களில் நோயாளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மே மாதத்தில் 8,590 நோயாளிகளும், ஜூன் மாதத்தில் 21,537 நோயாளிகளும், ஜூலை மாதத்தின் கடந்த 19 நாட்களில் மட்டும் 20,666 நோயாளிகளும் பதிவாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் 53 பேர் உயிரிழந்துள்ளனர், இதன் இறப்பு விகிதம் 0.07% ஆகும்.
டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்த, பொதுமக்கள் தங்கள் சுற்றுப்புறத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்ளவும், காய்ச்சலின் அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடவும் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். captions



