ஈரானுக்கு எதிராக சக்திவாய்ந்த தாக்குதல்களைத் தொடங்கியது அமெரிக்கா

ஈரானின் தொடர்ச்சியான தாக்குதல்களுக்குப் பதிலடியாக அந்நாட்டுக்கு எதிராக பாரிய மற்றும் சக்திவாய்ந்த தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க ராணுவம் அறிவித்துள்ளது. ஜோர்டானிலுள்ள அமெரிக்கத் தளங்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியிலுள்ள கடற்படைக் கப்பல்களை இலக்கு வைத்து ஈரான் மேற்கொண்ட தாக்குதல்களுக்கு மத்தியில், அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
ஈராக்கிலுள்ள ஈரான் சார்புக் குழுக்களைக் குறிவைத்து அமெரிக்காவும் சவூதி அரேபியாவும் கூட்டுத் தாக்குதல்களை நடத்தியதைத் தொடர்ந்து இந்த மோதல் மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இந்தச் சூழலில், ஈரான் – அமெரிக்க மோதலுக்கு உடனடித் தீர்வு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புகள் பொய்த்துப்போயுள்ள நிலையில், உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் மீண்டும் உயர்வைக் கண்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.




