LATEST
ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!ஹோர்முஸ் நெருக்கடி: உலக எண்ணெய் சந்தைக்கு புதிய அச்சுறுத்தல்!இரத்மலானை வீட்டின் மீது கைக்குண்டுத் தாக்குதல் நால்வர் கைது!எதிர்க்கட்சிகளையும் மகாசங்கத்தையும் ஒடுக்க முயற்சி – நாமல் ராஜபக்ஷ காட்டம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!
உலகம்

துப்பாக்கி கட்டுப்பாட்டை கடுமையாக்கும் தாய்லாந்து!

August 8, 2026 · Tamil Ceylon LK

தாய்லாந்தில் துப்பாக்கிப் பயன்பாடு தொடர்பான சட்டங்களை திருத்துவது குறித்து அந்நாட்டு அரசு கவனம் செலுத்தியுள்ளது.

பாடசாலை மாணவன் ஒருவன் 8 பேரைக் சுட்டுக் கொன்ற சம்பவத்தைத் தொடர்ந்து, தொடர்புடைய சட்டங்களை திருத்துவது குறித்து தாய்லாந்து பிரதமர் கவனம் செலுத்தியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்படி, பொது இடங்களில் துப்பாக்கிகளைக் கொண்டு செல்வதைத் தடை செய்யவும், அரசாங்க பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மட்டுமே ஆயுதங்களைப் பயன்படுத்தக்கூடிய வகையில் சட்டங்களைத் திருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

பேங்கொக்கில் உள்ள பாடசாலை ஒன்றில் நேற்று (07) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உயிரிழந்ததுடன், மேலும் 30 பேர் வரை காயமடைந்தனர்.

அதே பாடசாலையைச் சேர்ந்த 14 வயது மாணவன் ஒருவனே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளான்.

துப்பாக்கிச் சூடு நடத்திய பின்னர் அம்மாணவன் அதே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதாக தாய்லாந்து பொலிஸார் தெரிவித்தனர்.

தனது பாட்டி மற்றும் தாத்தாவுடன் வசித்து வந்த அம்மாணவன், பள்ளிக்குச் செல்வதற்கு முன்னர் அவர்கள் இருவரையும் சுட்டுக் கொன்றுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Related Stories

மேலும் ›