LATEST
நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!இன்று நள்ளிரவு முதல் புதிய எரிவாயு விலை!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை – மக்களுக்கு எச்சரிக்கை!சில மணிநேர விசாரணைக்குப் பின் நாமல் கைது!9 நாட்கள் கழித்து சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு!இங்கிலாந்து T20 தொடரில் குசல் மெண்டிஸ், பிநுர இல்லை!டெங்கு மரணங்கள் 72 ஆக உயர்வு!வறட்சி பயிர் சேதத்துக்கு இன்று முதல் இழப்பீடு!நேபாள வெள்ளப்பெருக்கு; சுரங்க மீட்பு பணிகள் தீவிரம்!இன்று நள்ளிரவு முதல் புதிய எரிவாயு விலை!பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் பலத்த மழை – மக்களுக்கு எச்சரிக்கை!சில மணிநேர விசாரணைக்குப் பின் நாமல் கைது!9 நாட்கள் கழித்து சுரங்கத்தில் இருந்து இருவர் உயிருடன் மீட்பு!இங்கிலாந்து T20 தொடரில் குசல் மெண்டிஸ், பிநுர இல்லை!டெங்கு மரணங்கள் 72 ஆக உயர்வு!வறட்சி பயிர் சேதத்துக்கு இன்று முதல் இழப்பீடு!
உள்ளூர்

வறட்சி பயிர் சேதத்துக்கு இன்று முதல் இழப்பீடு!

September 4, 2026 · Tamil Ceylon LK

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஊழல் எதிர்ப்புத் திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் நிறைவு செய்துள்ளது. 

குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர்நீதிமன்றின் வியாக்கியானத்தை பாராளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பி வைப்பதாக அறிவித்துள்ளது. 

இச்சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி 15 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்ததுடன், அவை சிரான் குணரத்ன, மஹிந்த சமயவர்தன மற்றும் சம்பத் விஜேரத்ன ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர் குழாம் முன்னிலையில் இரண்டு நாட்களாக விசாரிக்கப்பட்டன. 

இன்று (04) வாய்மூல சமர்ப்பணங்களை நிறைவு செய்த உயர் நீதிமன்றம், எழுத்துமூலச் சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு தரப்பினருக்கு உத்தரவிட்டது. 

அதனைத் தொடர்ந்து, இச்சட்டமூலத்தின் அரசியலமைப்புத் தன்மை குறித்த உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு எதிர்காலத்தில் அனுப்பி வைப்பதாகவும் நீதியரசர் குழாம் அறிவித்தது. 

குறித்த சட்டமூலத்தை சவாலுக்குட்படுத்தி முன்னாள் அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ், மீடியா லோ போரம் (Media Law Forum), ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீ லங்கா (Transparency International Sri Lanka) அமைப்பு உள்ளிட்ட 15 தரப்பினர் மனுக்களைத் தாக்கல் செய்திருந்தனர்.

Related Stories

மேலும் ›