சீனா முன்வைக்கும் அதிரடி கோரிக்கை
ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ள அனைத்து..........
Published March 23, 2026
Updated March 29, 2026
By Tamil Ceylon Desk
2 min read
ஈரானுக்கு எதிரான அமெரிக்க – இஸ்ரேல் போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினரும், இராணுவ நடவடிக்கைகளை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என சீனா கோரிக்கை விடுத்துள்ளது.
ஒரு “தீய சுழற்சி” உருவாவதைத் தடுப்பதற்கும், மீண்டும் பேச்சுவார்த்தை மேசைக்குத் திரும்புவதற்கும் இது அவசியமானது என சீனா சுட்டிக்காட்டியுள்ளது.
அல் ஜசீரா ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியின் படி, இந்தப் போர் ஹோர்முஸ் நீரிணையின் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பில் கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.
மேலும், பிராந்திய அமைதியை நிலைநாட்டவும், போர் தீவிரமடைவதைத் தவிர்க்கவும் சம்பந்தப்பட்ட நாடுகள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.