LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

மலேசியா ஊடாக சிகரெட் கடத்த முயன்ற 3 சீன தொழிலதிபர்கள் கைது!

May 25, 2026 · Tamil Ceylon LK

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் “பசுமை வழித்தடம்” (Green Channel) வழியாக, சட்டவிரோதமாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட 6 இலட்சத்து 60 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் மூன்று வெளிநாட்டு பயணிகள் இன்று (25) அதிகாலை சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மூவரும் 31, 36 மற்றும் 40 வயதுடைய சீன நாட்டு தொழிலதிபர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

சுங்க அதிகாரிகளின் கண்காணிப்பில் இருந்து தப்புவதற்காக இவர்கள் மிகவும் நுணுக்கமான முறையில் திட்டமிட்டுச் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சிகரெட் தொகையை சீனாவில் கொள்வனவு செய்துள்ள இவர்கள், முதலில் மலேசியாவின் கோலாலம்பூர் நகருக்குச் சென்றுள்ளனர். அங்கிருந்து இன்று (25) அதிகாலை 1.05 மணிக்கு “பாடிக் ஏர்” (Batik Air) நிறுவனத்திற்குச் சொந்தமான OD-297 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

விமான நிலைய வருகை முனையத்தில், எவ்வித பொருட்களும் தங்களிடம் இல்லை என அறிவிக்கும் “பசுமை வழித்தடம்” (Green Channel) ஊடாக தப்பிச்செல்ல முயன்றபோதே, சுங்க அதிகாரிகள் இவர்களை மறித்துச் சோதனை செய்துள்ளனர்.

இவர்கள் கொண்டு வந்த 6 பயணப் பொதிகளை (Suitcases) சோதனை செய்தபோது, அவற்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சீனத் தயாரிப்பான 40,400 சிகரெட்டுகள் அடங்கிய 202 சிகரெட் அட்டைப் பெட்டிகள் (Cartons) கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றின் மொத்த சந்தைப் பெறுமதி 660,000 ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சீன தொழிலதிபர்கள் மூவரிடமும், கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் தற்போது மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

மேலும் ›