LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

உரிம அட்டைகள் விநியோகம் வேகமடைந்தது!

May 27, 2026 · Tamil Ceylon LK

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு கடந்த இரண்டு மாதங்களாக பணிப்பாளர் நாயகம் ஒருவர் நியமிக்கப்படாததால், திணைக்களத்தின் அன்றாட பணிகள் முடங்கியுள்ளதாக உள்ளக தரப்புக்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் பணிப்பாளர் நாயகம் கடந்த மார்ச் இறுதியில் கைது செய்யப்பட்டதை அடுத்து, நிர்வாக நடவடிக்கைகள் மந்தகதியில் நடைபெறுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், சுமார் 10 இலட்சம் வாகன இலக்கத் தகடுகளும், 3 இலட்சம் ஓட்டுநர் உரிமங்களும் விநியோகிக்கப்படாமல் இரண்டு வருடங்களாக நிலுவையில் உள்ளதால் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இது குறித்து மேலதிக பணிப்பாளர் நாயகம் தாரக தேசப்பிரிய தெரிவிக்கையில்:

முன்னாள் பணிப்பாளர் கைது செய்யப்பட்டமை குறித்து அமைச்சு மட்டத்தில் கொள்கை ரீதியான முடிவு விரைவில் எடுக்கப்படும் என்றும், அஞ்சல் மூலம் விண்ணப்பங்களை அனுப்பும் 14 ‘ஓப்லைன்’ மாவட்ட அலுவலகங்களை, தாமதங்களைத் தவிர்க்கும் பொருட்டு ‘ஒன்லைன்’ மயமாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

அத்துடன், இராணுவம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உதவியுடன் 50% இற்கும் அதிகமான நிலுவை அட்டைகள் அச்சிடப்பட்டு அஞ்சல் மூலம் அனுப்பப்படுகின்றன. அடுத்த இரண்டு மாதங்களில் மேலும் ஒரு மில்லியன் அட்டைகள் கிடைக்கவுள்ளன.

அத்துடன், புதிய விநியோகஸ்தர் மூலம் மே 10 முதல் இலக்கத் தகடுகள் அச்சிடும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், நிலுவைகள் அனைத்தும் விரைவில் பூர்த்தி செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Stories

மேலும் ›