LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

IMF-க்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவசர கடிதம்!

May 31, 2026 · Tamil Ceylon LK

மத்திய கிழக்கு மோதல்கள் மற்றும் ‘டிட்வா’ சூறாவளி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் தற்காலிக நிவாரணங்களுக்காக அரசாங்கம் ஒதுக்கும் நிதி 100 பில்லியன் ரூபாவிற்குள் கட்டுப்படுத்தப்படும் என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க சர்வதேச நாணய நிதியத்திற்கு உறுதி அளித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜீவாவுக்கு ஜனாதிபதி அனுப்பியுள்ள கடிதத்திலேயே இந்த விபரங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், இந்தத் தற்காலிக நிவாரணங்கள் அனைத்தும் வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் படிப்படியாக நிறுத்தப்படும் என்றும், நாட்டின் நிதி இலக்குகளை எட்டக்கூடியதாக இருந்தால் மட்டுமே ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தினூடாக மேலதிக உதவிகள் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான நாணய நிதியத்தின் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளன.

இதன் மூலம் இலங்கைக்கு உடனடியாக சுமார் 695 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி விடுவிக்கப்படவுள்ளது.

இதன்படி, இதுவரை இலங்கைக்கு கிடைத்துள்ள மொத்த நாணய நிதிய உதவி 2.4 பில்லியன் டொலர்களாக உயர்ந்துள்ளது.

அண்மைய அனர்த்தங்களால் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2025 இல் 5% ஆக இருந்த பொருளாதார வளர்ச்சி, 2026 இல் 3% ஆகக் குறையும் என நாணய நிதியம் கணித்துள்ளது.

இதேவேளை ‘டிட்வா’ சூறாவளியால் மட்டும் இலங்கைக்கு 3.4 பில்லியன் டொலர் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன், மத்திய கிழக்கு மோதல்களால் மார்ச் மாத சுற்றுலா வருகை 20% வீழ்ச்சியடைந்துள்ளது.

எரிசக்தி செலவுகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு காரணமாக, கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பணவீக்கம் 5.4% ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு பெப்ரவரி மாதத்திற்குப் பிறகு எரிபொருள் விலைகள் 38% முதல் 46% வரை உயர்த்தப்பட்டுள்ளதாக நாணய நிதியம் சுட்டிக்காட்டியுள்ளது.

தற்காலிக பின்னடைவுகள் காணப்பட்டாலும், 2027 ஆம் ஆண்டு முதல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3% முதன்மை உபரி இலக்கை எட்டுவது உள்ளிட்ட கடுமையான நிதி மறுசீரமைப்புகளை இலங்கை தொடர வேண்டும் என நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›