LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

எரிபொருள் விலை உயர்வால் மக்கள் சுமை அதிகரிப்பு.

June 3, 2026 · Tamil Ceylon LK

நிலக்கரி இறக்குமதி மற்றும் மின் உற்பத்தியில் இடம்பெற்றுள்ள ஊழல், முறைகேடுகள் மற்றும் முறையற்ற நிர்வாகமே எரிபொருள் விலை உயர்வுக்கு நேரடி காரணம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச குற்றம் சாட்டியுள்ளார்.

நுகேகொடையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தரம் குறைந்த நிலக்கரி இறக்குமதி காரணமாக மின் உற்பத்திக்காக நாளொன்றுக்கு மேலதிகமாக 7 இலட்சம் முதல் 8 இலட்சம் லீற்றர் எரிபொருளைப் பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

அரசாங்கத்தின் இந்த தவறுகளுக்கான சுமையை, எரிபொருள் விலை உயர்வு மூலம் பொதுமக்கள் மீது அரசாங்கம் சுமத்துவதாகவும் அவர் சாடினார்.

மாகாண சபைகளின் அதிகாரம் மற்றும் நிதி மேலாண்மை ஆகியவை ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட அரசியல் பிரதிநிதிகள் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், அதற்குப் பதிலாக தேர்தலை நடத்தி மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம் அதிகாரங்களை வழங்குவதே சிறந்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

அரசாங்கத்தின் ஊழல்களையும், நிர்வாகத் திறமையின்மையையும் எதிர்க்கட்சி தொடர்ந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வரும் எனவும் நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்தார்.

Related Stories

மேலும் ›