LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உலகம்

மருத்துவ உலகில் புரட்சியை ஏற்படுத்தும் AI தடுப்பூசி!

June 5, 2026 · Tamil Ceylon LK

எதிர்காலத் தொற்றுநோய்களைத் தடுக்கும் நோக்கில், ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வடிவமைக்கப்பட்ட முற்றிலும் புதிய வகை தடுப்பூசி ஒன்று முதன்முறையாக மனிதர்களில் பரீட்சார்த்தமாகச் சோதிக்கப்பட்டுள்ளது.

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள இந்த ஆய்வில், தடுப்பூசியின் முக்கிய அங்கமான ‘அன்டிஜென்’பகுதி முழுமையாக செயற்கை நுண்ணறிவு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைரஸ்கள் மரபணு மாற்றம் அடைந்தாலும் அல்லது விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்குப் பரவினாலும், ஒட்டுமொத்த வைரஸ் குடும்பத்திலிருந்தும் பாதுகாப்பை வழங்கும் ‘விசேட அன்டிஜென்’ ஒன்றை இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கியுள்ளது.

தற்போது 39 பேரைக் கொண்டு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில், மனித நோய் எதிர்ப்பு மண்டலத்தில் இதன் தாக்கம் ‘மிதமானதாக’ உள்ள போதிலும், இது தொற்றுநோய் தயாரிப்பு முறையில் ஒரு அடிப்படை மாற்றம் எனப் பேராசிரியர் ஜொனாதன் ஹீனி தெரிவித்துள்ளார்.

அடுத்த கட்டமாக 200 பேரைக் கொண்டு இதன் செயற்திறன் ஆராயப்படவுள்ளதுடன், காய்ச்சல் மற்றும் எபோலா போன்ற நோய்களுக்கும் இந்த முறையில் தடுப்பூசிகளை உருவாக்க ஆராய்ச்சியாளர்கள் திட்டமிட்டுள்ளதாக பிபிசி செய்திச்சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›