LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

அச்சுவேலி தரவை பகுதியில் தீ விபத்து!

June 13, 2026 · Tamil Ceylon LK

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ , அருகில் உள்ள புற்தரைகள் ஊடாக பரவியமையால் , பல ஏக்கர் புற்தரைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது.

அச்சுவேலி பகுதியில் காணப்படும் தரவை பகுதியில் காணப்பட்ட குப்பைக்கு இனம் தெரியாத நபர்கள் தீ மூட்டியதில் , கடும் காற்று காரணமாக தீ , தரவை பகுதியில் உள்ள புற்தரைகள் ஊடாக வேகமாக பரவியது.

அது தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் மற்றும் மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு ஊரவர்கள் அறிவித்ததை அடுத்து விரைந்து செயற்பட்ட பொலிஸார் , தீயணைப்பு பிரிவினர் மற்றும் ஊரவர்கள் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

தீ குடியிருப்பு பகுதிக்குள் பரவ முதல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டமையால் ,பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாக ஊரவர்கள் தெரிவித்தனர்.

Related Stories

மேலும் ›