LATEST
சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்சுரேஷ் சலேவின் தொலைபேசி, மடிக்கணினி கடவுச்சொற்களை CID-க்கு வழங்க நீதிமன்றம் உத்தரவு!ஜூன் மாதத்தில் பணவீக்கம் மீண்டும் உயர்வு! மக்களின் வாழ்க்கைச் செலவில் கூடுதல் சுமை!அரிசியில் புதிய பொருளாதாரப் புரட்சி? அரசின் புதிய திட்டம்!உண்ணாவிரதத்தை முடிக்க முடிவு செய்த சுரேஷ் சலே!கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,024 புதிய டெங்கு நோயாளிகள்!முன்னாள் எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடியிடம் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு தீவிர விசாரணை.அரிசி கடன் முதல் வாழ்க்கைச் செலவு வரை… அரசை கடுமையாக சாடிய நாமல் ராஜபக்ஷ.டிரம்பின் உத்தரவை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்
உள்ளூர்

அலரி மாளிகையில் பிரதமர் – பெல்ஜியம் தூதுவர் விசேட கலந்துரையாடல்!

June 16, 2026 · Tamil Ceylon LK

இலங்கைக்கான பெல்ஜியம் தூதுவர் Didier Vanderhasselt அவர்கள், தனது பதவிக்காலத்தை நிறைவு செய்து நாடு திரும்புவதை முன்னிட்டு, ஜூன் 15 ஆம் திகதி அலரி மாளிகையில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை விடைபெறும் மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.

இந்தச் சந்திப்பின்போது, அவரது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்காக தூதுவர் Didier Vanderhasselt அவர்கள் ஆற்றிய முயற்சிகளைப் பாராட்டிய பிரதமர், இலங்கையில் பெல்ஜியத்தின் முதலீட்டு வாய்ப்புகளை மேலும் விரிவுபடுத்துவது குறித்துக் கலந்துரையாடினார்.

பிரதமரைச் சந்திப்பதற்கான வாய்ப்பளித்தமைக்கு நன்றி தெரிவித்த தூதுவர் Didier Vanderhasselt, தனது பதவிக்காலத்தில் இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு மிகவும் நேர்மறையானதாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

கல்வித் துறையில் ஒத்துழைப்பு வழங்குவது குறித்தும் இரு தரப்பினரும் கருத்துகளைப் பரிமாறிக்கொண்டதுடன், இலங்கைக்கும் பெல்ஜியத்திற்கும் இடையிலான உறவுகளைத் தொடர்ந்தும் பேணிப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் அதனை மேலும் பலப்படுத்துவதன் அவசியத்தையும் உறுதிப்படுத்தினர்.

புதுடெல்லியில் உள்ள பெல்ஜியத் தூதரகத்தின் முதலாம் செயலாளர் Jonas Heirbrant, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மேலதிக செயலாளர் திருமதி சாகரிகா போகாவத்த, வெளிவிவகார , வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

Related Stories

மேலும் ›