LATEST
இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!இலங்கை கடற்படையின் புதிய தளபதியாக வைஸ் அத்மிரால் டேமியன் பெர்னாண்டோ!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!
உள்ளூர்

நுவரெலியாவில் தொடங்கிய விசாரணை யாழில் முடிந்தது!

June 24, 2026 · Tamil Ceylon LK

தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றினுள் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், பிரதான சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ள உயிரிழந்த பெண்ணின் காதலன், அவரது  மனைவி ஆகியோர் அவர்களது குழந்தையுடன் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று (23) தம்பதியினர் வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம், சாவகச்சேரி நோக்கி பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த போது கிடைத்த தகவலின் அடிப்படையில், யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளும் வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளும் இணைந்து இன்று (24) அதிகாலை நடத்திய கூட்டு நடவடிக்கையின் மூலம் அவர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்படும் போது பிரதான சந்தேகநபர் முகக்கவசம் அணிந்திருந்ததுடன், அவரது மனைவி முஸ்லிம் பெண் போன்று வேடமணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளின் போது, தான் வவுனியாவிலிருந்து குருநாகலுக்குச் சென்று, அங்குள்ள தனது மற்ற இரு பிள்ளைகளையும் பார்த்துவிட்டு பொலிஸாரிடம் சரணடையவிருந்ததாகக் கூறியுள்ளார்.

வலான மத்திய ஊழல் தடுப்பு அதிரடிப்படையின் பணிப்பாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகல அவர்களின் முழுமையான மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சந்தேகநபர்கள் கடந்த சில நாட்களாக நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் தங்கியிருந்ததுடன், கடல் மார்க்கமாக வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நுவரெலியா பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

 

கடந்த 17ஆம் திகதி தெல்தெனிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

இவ்வாறு உயிரிழந்தவர் அம்பாறை பொது வைத்தியசாலையில் பணியாற்றி வந்த 34 வயதுடைய ஷம்யா தர்ஷனி என்ற இயல் வைத்தியர் ஆவார். இவருடைய காதலன் சடலத்தைக் காரில் போட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபரான காதலன் கன்னோருவ பகுதியைச் சேர்ந்த ஒரு மென்பொருள் பொறியியலாளர் ஆவார். சம்பவம் நடந்த நேரத்தில் அவர் அப்பகுதியிலிருந்து தப்பியோடியிருந்தார்.

தனது சகோதரி நுவரெலியாவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் தங்கியிருப்பதாகவும், அவர் பல நாட்களாக உணவு உட்கொள்ளவில்லை என்பதால் அந்த இடத்தை சோதனையிட உதவி தேவை என்றும் கூறி, கொட்டவெவ, தலாவ பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கடந்த 17ஆம் திகதி காலை நுவரெலியா பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.

அதன்படி நுவரெலியா பொலிஸ் குழுவினர் அந்த அடுக்குமாடி குடியிருப்புக்குச் சென்று சோதனையிட்ட போது அங்கு யாரும் இருக்கவில்லை.

எனினும், அங்குள்ள சிசிடிவி (CCTV) காட்சிகளைப் பரிசோதித்த போது, கடந்த 16ஆம் திகதி இரவு 9.50 மணியளவில் குறித்த யுவதியின் காதலன் அந்த வீட்டிற்கு வருவது பதிவாகியிருந்தது.

அங்கு சுமார் 40 நிமிடங்கள் தங்கியிருந்த அவர், பின்னர் இரவு 10.30 மணியளவில் மயக்கமடைந்திருந்த யுவதியைத் தூக்கிக்கொண்டு வெளியேறியுள்ளார். அதன் பின்னர் அவர் அந்த யுவதியைக் காரில் ஏற்றிச் சென்றுள்ளார்.

Related Stories

மேலும் ›