LATEST
UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!UNFPA உடன் இணைந்து பெண்கள் நலனுக்கு புதிய முன்னெடுப்புகள்!அந்நியச் செலாவணியை ஈட்டித் தரும் திருகோணமலையின் சுற்றுலா தளம்!ரவி கருணாநாயக்கவின் அலுவலக நியமன விவகாரம்… ஷியாமிலா பெரேரா கைது!கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!தந்திரிமலை ரஜமகா விகாரையில் ஜனாதிபதியின் விசேட விஜயம்!124 வலயங்கள் டெங்கு உயர் அபாயப் பகுதிகளாக அறிவிப்பு!முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஜூலை 13 வரை விளக்கமறியலில்!போலி கணக்குகளைத் தடுக்க புதிய கட்டுப்பாடுகளுடன் வரும் WhatsApp!
உள்ளூர்

கொழும்புக்கும் பொசன்” – பக்தர்களை ஈர்க்கும் தேசிய நிகழ்வு!

June 30, 2026 · Tamil Ceylon LK

ஜனாதிபதி அலுவலகத்தின் ஒருங்கிணைப்பில், அரச மற்றும் தனியார் நிறுவனங்களின் பங்களிப்புடன் இலங்கை சாரணர் இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள “கொழும்புக்கும் பொசன்” தேசிய சாரணர் பொசன் வலயத்தின் இரண்டாம் நாள், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவினால் நேற்று (29) மாலை திறந்து வைக்கப்பட்டது.

மஹிந்த தேரர் இலங்கைத் தீவிற்கு வருகை தந்ததை நினைவுகூரும் மாதிரி வடிவம், பொசன் கூடுகள் கண்காட்சி, பக்தி கீத நிகழ்ச்சி மற்றும் தானசாலைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த பொசன் வலயம் அமைந்துள்ளது.

மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர்களான ரோஷன் கமகே, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் கே.என்.எம். குமாரசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி ரஜீவ அமரசூரிய, இலங்கை சாரணர் இயக்கத்தின் தலைவர் ரன்சிறி பெரேரா உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Related Stories

மேலும் ›