அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் சிக்கலில்!

தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ள, அமெரிக்காவுக்கான முன்னாள் இலங்கைத் தூதர் ஜாலிய விக்ரமசூரியவைக் கைது செய்து ஆஜர்படுத்துவதற்காக, கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று (22) மற்றொரு பிடியாணை பிறப்பித்துள்ளது.
முன்னாள் தூதர் மீது அரசு நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் பாசன் அமரசேன, இவ்வழக்கு தொடர்பாக சட்டத்துறை தலைவரிடம் ஆலோசனை பெற்று, இவ்வழக்கை டிசம்பர் 9ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.
Follow & Share




