நீதியமைச்சர் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதம் இன்று!

நீதியமைச்சர் ஹர்ஷன நானயக்காரவிற்கு எதிராக எதிர்க்கட்சியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை இன்று (24) பாராளுமன்றத்தில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட சம்பவத்தின் போது கைதிகள் மற்றும் அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தத் தவறியமைக்காக இந்தப் பிரேரணை கடந்த 21ஆம் திகதி சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. இதற்கமைய, இன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow & Share




