LATEST
உலகின் முக்கிய எண்ணெய் பாதையில் சிக்கல் – எரிசக்தி சந்தையில் அழுத்தம்!இரண்டாகப் பிளந்து மூழ்கிய போர்க்கப்பல் – 118 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு!வெள்ளை மாளிகை பதவிக்கு விடை கொடுக்கும் கரோலின் லீவிட்!இலங்கையில் உற்பத்தி செய்யுங்கள்; இந்தியாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யுங்கள்இம்ரான் கான் உடல்நிலை குறித்து பரபரப்பு – ராணுவம் வெளியிட்ட தகவல்!அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் மருத்துவர் எச்சரிக்கை!நவீன விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை!உலகின் முக்கிய எண்ணெய் பாதையில் சிக்கல் – எரிசக்தி சந்தையில் அழுத்தம்!இரண்டாகப் பிளந்து மூழ்கிய போர்க்கப்பல் – 118 ஆண்டுகளுக்குப் பின் கண்டுபிடிப்பு!வெள்ளை மாளிகை பதவிக்கு விடை கொடுக்கும் கரோலின் லீவிட்!இலங்கையில் உற்பத்தி செய்யுங்கள்; இந்தியாவுக்கு வரியின்றி ஏற்றுமதி செய்யுங்கள்இம்ரான் கான் உடல்நிலை குறித்து பரபரப்பு – ராணுவம் வெளியிட்ட தகவல்!அமெரிக்கத் தூதராக எரிக் மேயர் உத்தியோகபூர்வமாக பதவியேற்பு!இளைஞர்களின் உணவுப் பழக்கத்தில் மாற்றம் மருத்துவர் எச்சரிக்கை!நவீன விவசாய இயந்திரங்களை இலங்கைக்கு கொண்டுவர அரசு நடவடிக்கை!
Uncategorized

மில்லியன் கணக்கானோர் நேரில் கண்ட பிரபஞ்சத்தின் பிரமிக்கவைக்கும் நிகழ்வு!

August 13, 2026 · Tamil Ceylon LK

சுமார் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, ஐக்கிய இராச்சியத்திலும் (UK) ஐரோப்பாவின் பல பகுதிகளிலுமுள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அரிய வகை சூரிய கிரகணத்தைப் பார்வையிடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 

ஐக்கிய இராச்சியத்திலிருந்து பார்த்த மக்களுக்குப் பகுதி சூரிய கிரகணத்தைக் காண முடிந்ததோடு, அது பிரித்தானிய நேரப்படி இரவு 7.00 மணிக்குச் சற்றுப் பிந்தி உச்சக்கட்டத்தை அடைந்தது. அந்த நேரத்தில் பெரும்பாலான பகுதிகளில் சூரியனின் 90% க்கும் அதிகமான பகுதியைச் சந்திரன் மறைத்திருந்ததைக் காண முடிந்தது. 

எனினும், கிரீன்லாந்து, ஐஸ்லாந்து மற்றும் ஸ்பெயினின் சில பகுதிகளில் முழுச் சூரிய கிரகணத்தை அனுபவிக்க முடிந்ததாகவும், அந்நேரங்களில் பகல் வேளையிலும் கூட அப்பகுதிகள் முழு இருளில் மூழ்கியமை ஒரு சிறப்புமிக்கக் காட்சியாக அமைந்ததாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ஐக்கிய இராச்சியம் மற்றும் ஐரோப்பா முழுவதிலும் சூரிய கிரகணத்தைப் பார்ப்பதற்காகத் திரண்ட பெரும் எண்ணிக்கையிலான மக்களிடையே ஆச்சரியக் குரல்களும் ஆரவார ஒலிகளும் எழுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

இவ்வாறான அரிய சூரிய கிரகணமானது பிரபஞ்சத்தின் மகத்துவத்தையும் இயற்கையின் விசித்திரத்தையும் மீண்டும் ஒருமுறை நினைவூட்டியுள்ளதாக வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Stories

மேலும் ›