LATEST
ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!டெங்கு பாதிப்பு 91,346 ஆக உயர்வு – தொடரும் அபாயம்!பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட திட்டம்!19,892 புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை – பொலிஸார் விசாரணை!ஜெனீவாவில் இன்று இலங்கையின் CRPD முதல் மதிப்பாய்வு!நீதித்துறையின் சுதந்திரத்தைப் பணயம் வைக்க முடியாது!ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் அடுத்த கட்டம் – எதிர்தரப்பு விசாரணைக்கு நீதிமன்றம் தீர்மானம்!ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை!ஆகஸ்ட் 18 முதல் ஆசியக் கோப்பை – இலங்கை அணி அறிவிப்பு!டெங்கு பாதிப்பு 91,346 ஆக உயர்வு – தொடரும் அபாயம்!பாதாள உலக நடவடிக்கைகளை கட்டுப்படுத்த நாடு முழுவதும் விசேட திட்டம்!19,892 புத்தகங்கள் விநியோகிக்கப்படவில்லை – பொலிஸார் விசாரணை!ஜெனீவாவில் இன்று இலங்கையின் CRPD முதல் மதிப்பாய்வு!நீதித்துறையின் சுதந்திரத்தைப் பணயம் வைக்க முடியாது!ஈஸ்டர் தாக்குதல் வழக்கில் அடுத்த கட்டம் – எதிர்தரப்பு விசாரணைக்கு நீதிமன்றம் தீர்மானம்!ட்ரம்பின் உயிருக்கு ஆபத்து என இஸ்ரேலிய உளவுத்துறை எச்சரிக்கை!
உள்ளூர்

டெங்கு பாதிப்பு 91,346 ஆக உயர்வு – தொடரும் அபாயம்!

August 14, 2026 · Tamil Ceylon LK

இந்த ஆண்டில் இதுவரை பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91 ஆயிரத்தை கடந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. 

இதன்படி, நேற்று (13) வரை நாட்டில் பதிவான மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 91,346 ஆக உயர்ந்துள்ளதாக அந்தப் பிரிவு குறிப்பிட்டுள்ளது. 

அத்துடன், டெங்கு நோய் காரணமாக 68 மரணங்களும் இதுவரை பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

இதில் அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் கடந்த ஜூலை மாதத்திலேயே பதிவாகியுள்ளனர். 

இதன்படி, ஜூலை மாதத்தில் மாத்திரம் 29,968 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இதனிடையே, இம்மாதத்தின் நேற்றைய தினம் வரையிலான கடந்த 13 நாட்களில் 6,004 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த ஆண்டின் இதுவரை கழிந்த காலத்தில் அதிகளவிலான நோயாளர்கள் மேல் மாகாணத்திலிருந்தே பதிவாகியுள்ளனர். 

இதன்படி மேல் மாகாணத்தில் 48,383 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

அதேபோல், தென் மாகாணத்தில் 13,479 நோயாளர்களும், மத்திய மாகாணத்தில் 8,160 நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related Stories

மேலும் ›