LATEST
ஹிருணிகா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை நவம்பரில்!கண்டி நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!நெல் அறுவடையுடன் கொள்வனவும் தீவிரம்!தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறதுகாலி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பு!கொழும்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுவனின் உயிரிழப்பு!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!ஹிருணிகா வழக்கில் அடுத்த கட்ட நடவடிக்கை நவம்பரில்!கண்டி நகரில் நாளை முதல் விசேட போக்குவரத்துத் திட்டம்!நெல் அறுவடையுடன் கொள்வனவும் தீவிரம்!தங்கம் வாங்க காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சி – விலை மீண்டும் உயர்வு!வனஜீவராசிகள் கால்நடை வைத்தியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்கிறதுகாலி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பு!கொழும்பை அதிர்ச்சிக்குள்ளாக்கிய சிறுவனின் உயிரிழப்பு!மின்னல் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
விளையாட்டு

காலி டெஸ்டின் மூன்றாம் நாள் ஆட்டம் விறுவிறுப்பு!

August 17, 2026 · Tamil Ceylon LK

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று (17) இடம்பெறுகின்றது. 

காலியில் இடம்பெறும் போட்டியின் இரண்டாம் நாளான நேற்று மழை காரணமாக இடைநிறுத்தப்பட்டு மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருந்தது. 

நேற்றைய (16) இரண்டாம் நாள் ஆட்ட நேர நிறைவில் இந்திய அணி தமது முதலாம் இனிங்ஸில் 9 விக்கெட்டுக்களை இழந்து 460 ஓட்டங்களைப் பெற்றது. 

இந்திய அணி சார்பில் துடுப்பாட்டத்தில் தேவ்தத் படிக்கல் 167 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொடுத்தார். 

கே.எல் ராஹூல் 82 ஓட்டங்களையும், துருவ் ஜூரெல் 51 ஓட்டங்களையும் அதிபட்சமாக பெற்றுக் கொடுத்தனர். 

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் பிரபாத் ஜயசூரிய 4 விக்கெட்டுக்களையும், கேசர நுவந்த 3 விக்கெட்டுக்களையும், அசித்த பெர்னாண்டோ ஒரு விக்கெட்டயைும் கைப்பற்றினர். 

இந்நிலையில் இன்றைய தினம் மூன்றாம் நாள் ஆட்டம் ஆரம்பமான நிலையில் இந்திய அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 462 ஓட்டங்களை பெற்றதுடன் இந்திய அணியின் முதலாம் இனிங்ஸ் முடிவுக்கு வந்தது. 

அதன்பின்னர் இலங்கை அணி தமது முதலாம் இனிங்ஸை தொடரவுள்ளது.

Related Stories

மேலும் ›