LATEST
பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!
உள்ளூர்

இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!

September 3, 2026 · Tamil Ceylon LK

இன்று முதல் அடுத்த சில நாட்களில், நாட்டின் வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

ஊவா, மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

இதேவேளை சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, ஒகஸ்ட் 28 ஆம் திகதி முதல் செப்டம்பர் 07 ஆம் திகதி வரை இலங்கைக்கு அருகிலுள்ள அட்சரேகைகளுக்கு நேர் மேலே சூரியன் காணப்படும். 

இன்றைய தினம் (03) நண்பகல் 12:09 மணிக்கு மாதம்பே, தோரயாய, தொட்டகமுவ, ரத்தோட்ட மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Stories

மேலும் ›