LATEST
பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!பொரளையில் கட்டளையை மீறிய முச்சக்கரவண்டி மீது பொலிஸ் துப்பாக்கிச் சூடு!எல்-நினோ பாதிப்புக்கு தடையற்ற நீர் விநியோகத் திட்டம்!22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு வரை நீர் விநியோகம் தடை!ரிஷப் பண்ட் 2,534 ஓட்டங்கள் – தோனியின் சாதனை முறியடிப்பு!முதியோர் அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கிக் கணக்கில்!இலங்கைக்கு நேர் மேலே சூரியன் – செப்டம்பர் 7 வரை தொடரும்!5ஆம் தர மாணவர்களின் பெறுபேறுகள் வெளியாகின!
உள்ளூர்

22வது திருத்த மனுக்கள்: இன்று மாலை 3 மணிக்குள் சமர்ப்பிக்க உத்தரவு!

September 3, 2026 · Tamil Ceylon LK

அரசியலமைப்பின் 22வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான எழுத்துமூல சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்வதற்கு இன்று (03) வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

இன்று பிற்பகல் 3.00 மணிக்கு முன்னர் அந்த எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களைத் தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் உத்தரவிட்டுள்ளது. 

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்ட மூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை நேற்று (02) நிறைவடைந்தது. 

மனுக்கள் மீதான விசாரணையை நிறைவு செய்த நீதியரசர்கள் குழாம், அது தொடர்பான எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றை இன்றைய தினத்திற்குள் சமர்ப்பிக்குமாறு மனுதாரர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. 

குறித்த சட்ட மூலத்தின் அரசியலமைப்புத் தன்மை தொடர்பான உயர் நீதிமன்றின் வியாக்கியானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் பிரதம நீதியரசர் தலைமையிலான ஐவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் அறிவித்துள்ளது.

Related Stories

மேலும் ›