பூஸா சிறையுள்ளே சிக்கிய பொருள்கள்
கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா உயர்
கடுமையான குற்றவாளிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள பூஸா உயர் பாதுகாப்பு சிறைச்சாலையில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனையில் 29 கையடக்கத் தொலைபேசிகள் மீட்கப்பட்டன.
நேற்று (09) காலை 6.00 மணியளவில் சிறைச்சாலை புலனாய்வு மற்றும் தந்திரோபாயப் பிரிவு மற்றும் காவல்துறை சிறப்புப் பணிக்குழு இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையின் போது சிறைச்சாலையின் ஏ, சி மற்றும் டி பிரிவுகளில் இந்த கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிறப்பு பிரிவு கைதிகளின் பகுதியிலும் மீட்கப்பட்ட கைபேசிகள்
சிறப்புப் பிரிவு கைதிகளான “தெமட்டகொட சமிந்த”, “வெலே சுதா” மற்றும் “மிதிகம ருவான்” ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைச்சாலையின் ஏ பிரிவிலும் கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலை ஆணையாளரும் ஊடகப் பேச்சாளருமான ஜெகத் வீரசிங்க தெரிவித்தார்.
