LATEST
ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைஇறுதி டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி கட்டாயம்!வறட்சியால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!ஈரான் போரில் அமெரிக்கா தோல்வி – மசூத் பெசெஷ்கியன்!டிக்டாக் வழக்கில் 400 மில்லியன் டொலர் தீர்வு!22வது திருத்தத்திற்கு சர்வஜன வாக்கெடுப்பு வேண்டும் – ITAK!பாராளுமன்ற எரிபொருள் செலவுகள் குறித்து எழுந்த கேள்வி!கட்டுமான வீட்டில் நுழைந்து பொருட்களை திருடியதாக இருவர் கைது!நாட்டை சூழவுள்ள கடற்பகுதிகளுக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கைஇறுதி டெஸ்டில் இலங்கைக்கு வெற்றி கட்டாயம்!வறட்சியால் 81 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!
உள்ளூர்

மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை இடைநிறுத்த யோசனை

November 4, 2025 · Tamil Ceylon LK

எதிர்வரும் காலங்களில் மன்னாரில் காற்றாலை மின் உற்பத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவதை இடைநிறுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

நாடளாவிய ரீதியில் மீள் புதுப்பிக்கப்படும் வளங்களின் விரிவாக்கத் திட்டத்திற்கமைய, அதிகளவான காற்று ஆற்றல் வளம் கொண்ட பிரதேசமாக அடையாளங் காணப்பட்டுள்ள மன்னார் தீவில் மூன்று (03) காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.

குறித்த கருத்திட்டங்களில் ஒரு கருத்திட்டமான தம்பபவனி காற்றாலை மின்னுற்பத்தி நிலைய நடவடிக்கைகள் 2021ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏனைய கருத்திட்டங்களான 20 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி மற்றும் 50 மெகாவோட் காற்றாலை மின்னுற்பத்தி நடவடிக்கைகள் முறையே இரண்டு தனியார் நிறுவனங்களால் 2025 டிசம்பர் மற்றும் 2026 டிசம்பர் மாதத்தில் ஆரம்பிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

பிரதேச மக்கள் சமர்ப்பித்துள்ள சுற்றாடல் மற்றும் சமூகப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு, மன்னார் தீவு மக்களின் விருப்பமின்றி தொடர்ந்தும் குறித்த தீவில் காற்றாலை மின்னுற்பத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென ஜனாதிபதியினால் ஏற்புடைய அதிகாரிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக, வலுசக்தி அமைச்சரால் அமைச்சரவைக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Related Stories

மேலும் ›