சுகீஸ்வர பண்டாரவுக்கு சிறைச்சாலையில் சிகிச்சை!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் முன்னாள் தனிப்பட்ட செயலாளரான சுகீஸ்வர பண்டார சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரது காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்ததால் ,நேற்று (21) சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு அரச நிறுவனங்களில் இருந்து சம்பளம் பெற்ற சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் சுகீஸ்வர பண்டார கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Follow & Share




