பல மாவட்டங்களில் இன்று மழை – பலத்த காற்று வீசக்கூடும் எனவும் எச்சரிக்கை!

. நாட்டின் பல பாகங்களில் இன்றைய தினம் இடைவிடாது மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்றைய தினம் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது. மேலும், அநுராதபுரம் மாவட்டத்தின் சில பகுதிகளிலும் சிறிதளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மழை நிலைமைகளுக்கு மத்தியில் நாட்டின் பல பகுதிகளில் காற்றின் வேகமும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களுடன் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




