PTL நிறுவனத்திற்கு எதிரான விசாரணை தொடரும் நிலையில் வர்த்தக நடவடிக்கைகள் இடைநிறுத்தம்.

இலங்கை மத்திய வங்கி, பெர்பெச்சுவல் டிரஷரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகளை மேலும் இடைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கைகள் நேற்று (05) மாலை 4.30 மணி முதல் 06 மாத காலத்திற்கு இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியால் அந்நிறுவனத்திற்கு எதிராக நடத்தப்படும் விசாரணைகளை மேலும் முன்னெடுத்துச் செல்லும் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் மற்றும் பத்திரங்கள் கட்டளைச் சட்டம் மற்றும் உள்நாட்டு திறைசேரி உண்டியல்கள் கட்டளைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு இணங்க மத்திய வங்கி இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Follow & Share




