LATEST
முன்னாள் IGP வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!டீசல், மண்ணெண்ணெய் விலையில் மாற்றமில்லை!போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகிறீர்களா?குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் முக்கிய மாற்றம்!டெங்கு பரவல் தீவிரம்… கொசு ஒழிப்பை அதிகரிக்க அழைப்பு!Skills for Life – மாணவர்களுக்கான மாபெரும் கண்காட்சி!கோடிக்கணக்கான சொத்துகள்… மெர்வின் சில்வாவுக்கு புதிய சிக்கல்!வானிலை திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!முன்னாள் IGP வழக்கில் நீதிமன்றத்தின் முக்கிய தீர்ப்பு!டீசல், மண்ணெண்ணெய் விலையில் மாற்றமில்லை!போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகிறீர்களா?குழந்தைகளின் உணவுப் பழக்கத்தில் முக்கிய மாற்றம்!டெங்கு பரவல் தீவிரம்… கொசு ஒழிப்பை அதிகரிக்க அழைப்பு!Skills for Life – மாணவர்களுக்கான மாபெரும் கண்காட்சி!கோடிக்கணக்கான சொத்துகள்… மெர்வின் சில்வாவுக்கு புதிய சிக்கல்!வானிலை திணைக்களத்தின் அவசர எச்சரிக்கை!
உள்ளூர்

போதைப்பொருள் கடத்தலுக்கு பயன்படுத்தப்படுகிறீர்களா?

July 31, 2026 · Tamil Ceylon LK

வானூர்தி பயணம் உள்ளிட்ட எந்தவொரு பயணத்தின்போதும், பிறருக்குச் சொந்தமான பொதிகள் அல்லது பயணப் பைகளை பெற்றுச் செல்வதைத் தவிர்க்குமாறு இலங்கை சுங்கத் திணைக்களம், வானூர்தி நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் விசேட கோரிக்கை விடுத்துள்ளது.
பயணிகளுக்குத் தெரியாமலேயே போதைப்பொருட்கள் உள்ளிட்ட சட்டவிரோதப் பொருட்களைக் கடத்துவதற்காக சில குற்றக் குழுக்கள் அவர்களை பயன்படுத்தும் அபாயம் நிலவுவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சுங்கத் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன புஞ்சிஹேவா கருத்துத் தெரிவிக்கையில், தாம் எடுத்துச் செல்லும் பொருள் என்ன என்பது கூட தெரியாமல் பொதுமக்கள் கடுமையான குற்றச் செயல்களில் சிக்கிக்கொள்ளும் அபாயம் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மிக நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள்கூட அறியாமலேயே போதைப்பொருள் கடத்தல் குழுக்களால் பயன்படுத்தப்படுவதாகவும், அண்மையில் 19 வயதுடைய இளைஞர் ஒருவரின் பெயரில் பெருந்தொகையான போதைப்பொருளை நாட்டுக்குள் கொண்டு வர முயற்சிக்கப்பட்ட சம்பவமும் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், பயணப் பையை தாமே பரிசோதித்தாலும் எளிதில் கண்டறிய முடியாத வகையில் போதைப்பொருட்களை மறைத்து வைக்கும் நுட்பங்களை கடத்தல்காரர்கள் பயன்படுத்துவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இலவச வானூர்தி பயணச் சீட்டை வழங்கி வெளிநாடு செல்ல ஏற்பாடு செய்வதாக யாரேனும் முன்வந்தால், அதன் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் குறித்து மிகுந்த அவதானத்துடன் சிந்திக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

உலகின் பல நாடுகளில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு மரண தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகள் விதிக்கப்படுவதால், எந்தச் சூழலிலும் தமக்குச் சொந்தமில்லாத பொதிகள் அல்லது பொருட்களை எடுத்துச் செல்ல சம்மதிக்க வேண்டாம் என இலங்கை சுங்கத் திணைக்களம் மேலும் வலியுறுத்தியுள்ளது.

Related Stories

மேலும் ›