LATEST
கொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டாம்! முக்கிய அறிவிப்புபேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!27% சரிவு! இலங்கை வாகன சந்தையில் என்ன நடக்கிறது?கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மக்களே அவதானம்!ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி! கச்சா எண்ணெய் விலை சரிந்ததுஇலங்கையில் வானிலை மோசமடைகிறது! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!கொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!நாளை பள்ளிக்குச் செல்ல வேண்டாம்! முக்கிய அறிவிப்புபேராதனைப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்!27% சரிவு! இலங்கை வாகன சந்தையில் என்ன நடக்கிறது?கண்டி, கேகாலை, நுவரெலியா, இரத்தினபுரி மக்களே அவதானம்!ஈரான் பேச்சுவார்த்தை எதிரொலி! கச்சா எண்ணெய் விலை சரிந்ததுஇலங்கையில் வானிலை மோசமடைகிறது! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை20 கைதிகள் பூசா சிறைக்கு – சிறைச்சாலைகள் திணைக்களத்தின் நடவடிக்கை!
உள்ளூர்

இலங்கையில் வானிலை மோசமடைகிறது! வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

August 3, 2026 · Tamil Ceylon LK

சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

​மத்திய, சப்ரகமுவ, ஊவா, கிழக்கு மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என்பதுடன், அப்பகுதிகளில் மேகமூட்டமான வானிலை காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

​மேல், வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களில் அடிக்கடி மழை பெய்யும். 

​முல்லைத்தீவு மாவட்டத்தில் பிற்பகல் 2.00 மணிக்குக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

​வடமத்திய, சப்ரகமுவ, தென், மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். 

​இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

​ புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் மழையோ அல்லது இடிமின்னலுடன் கூடிய மழையோ பெய்யும். 

​காற்று தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும் என்பதுடன், காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30-40 கிலோமீற்றர் வரை காணப்படும். 

​காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

​புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும். 

​காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாக அல்லது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். 

​எனவே, மறு அறிவித்தல் வரை இக்கடற்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என கடற்றொழிலாளர்கள் அறிவுறுத்தப்படுகின்றனர். 

​புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். 

​புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடற்பகுதிகளில் கடலலைகளின் உயரம் சுமார் 2.5 – 3.0 மீற்றர் வரை உயரக்கூடிய சாத்தியக்கூறு நிலவுகிறது. 

​இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் போது அப்பகுதிகளில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அக்கடற்பகுதிகள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Related Stories

மேலும் ›