LATEST
மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை – கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தல்!உரிமம் முதல் தயாரிப்பு திகதி வரை சர்ச்சை – டின் மீன் நிறுவனம் சிக்கியது!நாட்டில் பதிவாகும் டெங்கு மரணங்களின் எண்ணிக்கை 64 ஆக உயர்ந்துள்ளது.ரஷ்ய எண்ணெய் இறக்குமதி – இந்தியா, சீனாவுக்கு புதிய நெருக்கடி?உச்சம் தொட்ட தங்கம்… இன்று விலை சரிவு!உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவர்கள் கவனத்திற்கு – பரீட்சைத் திணைக்களம் முக்கிய அறிவிப்பு!சிரேஷ்ட காவல்துறை அதிகாரிகளுக்கு புதிய நியமனங்கள்!எம்.பிக்களுக்கு சம்பள உயர்வு இல்லை – சபையில் திட்டவட்ட விளக்கம்!
உள்ளூர்

நீதித்துறையில் குவியும் வழக்குகள்… விசேட தெரிவுக்குழு அமைக்க சபாநாயகரிடம் கோரிக்கை!

August 4, 2026 · Tamil Ceylon LK

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தெரிவுக்குழுவொன்றைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் முன்மொழிவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை நீதித்துறை முறைமைக்குள் தற்போது 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுவதால், இந்த வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று முன்மொழிவொன்றில் கையொப்பமிடப்பட்டது. 

இந்த முன்மொழிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் கையொப்பமிட்டனர். 

இதன்படி, அந்த முன்மொழிவை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories

மேலும் ›