LATEST
கண்டி, நுவரெலியாவில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்ஜூலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை 1.7% வீழ்ச்சி!அரசியலமைப்பு திருத்தம் குறித்து உலகின் கவனம் இலங்கை மீது!நீதித்துறையில் குவியும் வழக்குகள்… விசேட தெரிவுக்குழு அமைக்க சபாநாயகரிடம் கோரிக்கை!சிவப்பு எச்சரிக்கை அமலில்! மக்கள் பாதுகாப்பாக இருங்கள்மழை காரணமாக பரீட்சைகள் குறித்து புதிய ஆலோசனைகடல் சீற்றம் உச்சம்! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்புகொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!கண்டி, நுவரெலியாவில் கல்வி நடவடிக்கைகள் மீண்டும் ஆரம்பம்ஜூலையில் சுற்றுலாப் பயணிகள் வருகை 1.7% வீழ்ச்சி!அரசியலமைப்பு திருத்தம் குறித்து உலகின் கவனம் இலங்கை மீது!நீதித்துறையில் குவியும் வழக்குகள்… விசேட தெரிவுக்குழு அமைக்க சபாநாயகரிடம் கோரிக்கை!சிவப்பு எச்சரிக்கை அமலில்! மக்கள் பாதுகாப்பாக இருங்கள்மழை காரணமாக பரீட்சைகள் குறித்து புதிய ஆலோசனைகடல் சீற்றம் உச்சம்! மீனவர்களுக்கு முக்கிய அறிவிப்புகொழும்பு செல்லும் பயணிகள் மாற்று வழி பயன்படுத்துங்கள்!
உள்ளூர்

நீதித்துறையில் குவியும் வழக்குகள்… விசேட தெரிவுக்குழு அமைக்க சபாநாயகரிடம் கோரிக்கை!

August 4, 2026 · Tamil Ceylon LK

தேங்கிக் கிடக்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்காக தெரிவுக்குழுவொன்றைக் கோரி ஐக்கிய மக்கள் சக்தியினால் சபாநாயகரிடம் முன்மொழிவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. 

இலங்கை நீதித்துறை முறைமைக்குள் தற்போது 1.1 மில்லியன் வழக்குகள் தேங்கிக் கிடப்பதாக நீதி அமைச்சின் தரவுகள் சுட்டிக்காட்டுவதால், இந்த வழக்குகளைத் துரிதப்படுத்துவதற்கான முன்மொழிவுகளைப் பெற்றுக்கொள்வதற்காக பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் தலைமையில் நேற்று முன்மொழிவொன்றில் கையொப்பமிடப்பட்டது. 

இந்த முன்மொழிவில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் கையொப்பமிட்டனர். 

இதன்படி, அந்த முன்மொழிவை இன்று பாராளுமன்றத்தில் சபாநாயகரிடம் கையளிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்றக் குழுவினர் நடவடிக்கை எடுத்தனர்.

Related Stories

மேலும் ›