LATEST
பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!மொரோக்கோவில் இறுதிப்போட்டி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை!32 ஆண்டுகளுக்குப் பின் ஏலத்திற்கு வரும் டயானாவின் ‘Revenge Dress’!நாட்டிற்கு நன்மை’ பேரணி இன்று பொலன்னறுவையில்!தமிழர் கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்!பெரிம் தீவு ஹவுதிகள் கட்டுப்பாட்டில் – செங்கடலில் பதற்றம்!மாகாண சபைத் தேர்தலை உடனே நடத்துங்கள் – எதிர்க்கட்சி அழுத்தம்!2 மில்லியன் டாலர் லஞ்ச வழக்கு – நாமல் பிரதான சந்தேக நபரா?டெங்கு பாதிப்பு 97,000 கடந்தது – தீவிர கட்டுப்பாட்டு நடவடிக்கை!மொரோக்கோவில் இறுதிப்போட்டி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை!32 ஆண்டுகளுக்குப் பின் ஏலத்திற்கு வரும் டயானாவின் ‘Revenge Dress’!நாட்டிற்கு நன்மை’ பேரணி இன்று பொலன்னறுவையில்!தமிழர் கோரிக்கைகளை முன்வைத்து சாவகச்சேரியில் மாபெரும் போராட்டம்!
விளையாட்டு

மொரோக்கோவில் இறுதிப்போட்டி? அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் இல்லை!

September 12, 2026 · Tamil Ceylon LK

2030 ஆம் ஆண்டு ஃபீஃபா (FIFA) உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி மொரோக்கோவில் நடைபெறும் என அந்தநாட்டு கால்பந்து சம்மேளனத் தலைவர் கூறிய கருத்தை உலகக் கால்பந்து நிர்வாக அமைப்பான ஃபீஃபா மறுத்துள்ளது
அத்துடன் இறுதிப்போட்டி நடக்கும் மைதானம் குறித்த முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

முன்னதாக, மொரோக்கோவில் நிர்மாணிக்கப்பட்டு வரும் 1,15,000 இருக்கை வசதி கொண்ட ‘இரண்டாம் ஹசன் அரசர் மைதானத்திலேயே, 2030 உலகக் கோப்பை இறுதிப்போட்டி நடைபெறும் என மொமொக்கோ கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் பௌசி லெக்ஜா (Fouzi Lekjaa) தெரிவித்திருந்தார்.

எனினும் இறுதிப்போட்டி நடைபெறும் இடம் மற்றும் மைதானம் குறித்த அதிகாரப்பூர்வ முடிவு “சரியான நேரத்தில்” முறைப்படி அறிவிக்கப்படும் என ஃபீஃபா தெரிவித்துள்ளது.

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஃபீஃபா தலைவர் தேர்தலில் மொரோக்கோவின் அரசியல் ஆதரவைப் பெறுவதற்காகஇ தற்போதைய தலைவர் ஜியானி இன்ஃபாண்டினோ (Gianni Infantino) இறுதிப்போட்டியை மொரோக்கோவிற்கு வழங்குவதாக உறுதியளித்தார் என்ற செய்திகளையும் ஃபீஃபா ஏற்கனவே மறுத்திருந்தது.

2030 உலகக் கோப்பைத் தொடரை மொரோக்கோ, ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.

2010 இல் தென்னாப்பிரிக்காவிற்குப் பிறகு ஆப்பிரிக்கக் கண்டத்தில் உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுப்பது இது இரண்டாவது முறையாகும்.

Related Stories

மேலும் ›