மேல் மாகாணத்தில் டெங்கு தீவிர அதிகரிப்பு!

மேல் மாகாணத்தில் உள்ள பல வைத்தியசாலைகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அவற்றின் உச்சக் கொள்ளளவை எட்டியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
நோயாளர்களின் எண்ணிக்கை அதிவேகமாக அதிகரித்து வருவதன் காரணமாக, அவர்களைப் பராமரிக்கும் நடவடிக்கைகள் கடுமையான சிரமத்திற்கும் அபாயத்திற்கும் உள்ளாகியுள்ளதாக அதன் தற்காலிக பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர குறிப்பிட்டுள்ளார்.
நோயாளர்கள் அறிக்கைப்படுத்தப்படுவது இவ்வாறு அதிகரிப்பதன் காரணமாக, அதற்கு இணையாக வரும் நாட்களில் மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக்கூடும் என அவர் மேலும் எச்சரித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதிலும் இருந்து அறிக்கை செய்யப்பட்டுள்ள மொத்த டெங்கு நோயாளர்களான 59,638 பேரில் 52.4 சதவீதமானோர் மேல் மாகாணத்திலிருந்தே அறிக்கை செய்யப்பட்டுள்ளதாக வைத்தியர் கபில கன்னங்கர மேலும் தெரிவித்தார்.




